Saturday, 19 April 2014

சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில், சிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது பேசியவைகள் அவருடைய சிலுவை மொழிகள் என அழைக்கப்படுகின்றன.

முதல் வார்த்தையில், இயேசு தம்முடைய சத்துருக்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசினார். 

இரண்டாவது வார்த்தையில், இயேசு மனந்திரும்பின கள்ளனுக்காகப் பேசினார்.

மூன்றவது வார்த்தையில், இயேசு தன் தாயாகிய மரியாளுக்காக 
பேசினார்.

நான்காவது வார்த்தையில், இயேசு உலக மனிதர்களின் பாவங்கள் அனைத்தும் தன் மேல் வரும் நேரத்தில் தன்னைவிட்டு எடுப்பட்டதன் பிதாவின் பிரசன்னத்திற்காய் பேசினார்.

ஐந்தாவது வார்த்தையில், இயேசு தன்னுடைய ஆவிக்குரிய தேவையைக் குறித்து மனிதகுலத்தின் ஆத்தும இரட்சிப்பின் திட்டத்தைக்குறித்து பேசினார்.

ஆறாவது வார்த்தையில், இயேசு தான் பூமிக்கு மனிதனாய் பிறந்த நோக்கத்தை, பிதாவின் அநாதி திட்டத்தை முடித்ததை குறித்து பேசினார்.
 

ஏழாவது வார்த்தையில், இயேசு மனிதகுலத்திற்காய், அவர்களின் பாவபரிகாரியாய் தன்னையே ஜீவ பலியாக ஒப்புகொடுத்து மரித்தார் .



1) மன்னிப்பு
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34) (மத்தேயு 6:14)

2) இரட்சிப்பு
"இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)

3) அரவணைப்பு
தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27)

4) தத்தளிப்பு

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27 : 46)

5) தவிப்பு
எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19:28)

6) அர்ப்பணிப்பு
இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30)

7) ஒப்புவிப்பு

இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)

இது நமக்காகவும்,நம் ஜனத்துக்காகவும் துக்கப்படும் வேளை.இரட்டை கிழித்து சாம்பலில் உட்காராவிட்டாலும் வேத வசனம் சொல்கிறபடி நம் இருதயங்களை கிழித்து நம் மக்கள் மேல் வரப்போகும் கோபாக்கினைகளுக்கு தேவன் ஜனங்களை காக்கும் படி திறப்பிலே நின்று அவருக்கென்று கதறகூடிய ஆத்துமாவை ஆணடவர் தேடிக்கொண்டிருக்கிறார்.

கண்முன்னால் அழிந்துகொண்டிருக்கும் இத்தனை கோடி ஜனங்களுக்கு நாம் என்ன் பதில் ஆண்டவருகு சொல்லப்போகிறோம். நாம் சிந்திப்போம் ,ஆண்டவருக்காக எதையாகிலும் சாதிக்கிறவர்களாக அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதே அவரின் சிலுவையை தியானிப்பதின் உண்மையான அர்த்தம் ஆகும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

No comments:

Post a Comment