Saturday, 25 October 2014

இயேசுவோடு தொடர்புடைய வாழ்க்கை - பேதுருவாய் மாறிய சீமோன்

இயேசு சீடர்களின் கால்களை கழுவியத்தின் மூலமாக, சீடர்கள் தாழ்மையை கற்றுகொண்டனர். பின்னர் இயேசு தாம் சிலுவையில் மரிக்க வேண்டிய தருணம் வந்தமையால், "பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று" என்றார். பேதுரு அவரை நோக்கி: "ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்" என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: "எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

பின்னர் இயேசு சீடருடன் கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்குவந்து, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், "என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள்" என்று சொன்னார். இயேசு வியாகுலப்பட்டு ஜெபிக்கையில் சீடர்கள் தூங்கினார்கள். இயேசு பேதுருவை நோக்கி "சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?" என்றார். எப்பொழுதெல்லாம் பேதுரு தவறு செய்தாரோ அப்பொழுதெல்லாம் இயேசு பேதுருவை "சீமோன்" என்று பழையபெயரை சொல்லி எச்சரித்தார்.

சிறிது நேரத்திற்குள்ளாக காட்டி கொடுக்கும் யூதாஸ் உடன் ஒரு கூட்டம் வந்து இயேசுவைப் பிடித்தனர். பேதுரு தன்னுடைய உரையிலிருந்து கத்தியை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்கரனாகிய மல்கூசின் வலது காதை வெட்டினார். இயேசு அந்த கதை ஒட்டி குணப்படுத்தினார். பேதுரு காட்டிய சிறிது நேர துணிவின் விளைவு அவரை கோழைத்தனத்திற்க்கு வழி காட்டியது. முதலில் பேதுரு இயேசுவை தூரத்தில் பின் தொடர்ந்து பிரதான ஆசாரியன் அரண்மனை முற்றம் வரை சென்றார்.
யோவானைப்போல இயேசுவின் அருகே நிற்க வேண்டியவர், இப்படி வெளிய நின்ற கூடத்தில் ஒருவறாய் குளிர் காய்ந்து கொண்டு இயேசுவையும் மூன்று முறை மறுதலித்து சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினார். உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதார். இயேசுவின் சிலுவை மரணமும், தமது இறுதி மறுதளிப்பும் பேதுருவை மிகவும் பாதித்தது. "அழுகை அழுக்கை கழுவும்" என்பது நல்மொழி. மனம்கசந்து அழுதமையால் அழுக்கு நீங்கி சுத்தமானார் பேதுரு.

இயேசு உயிர்த்தெழுந்த நாளன்று காலையில், விழுந்து போன ஆவியுள்ள பேதுருவுக்கு ஒரு உற்சாகமான வார்த்தை காத்திருந்தது. ஒரு தேவ தூதன் கல்லறையிலிருந்து, "அவருடைய சீடரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய் சொல்லுங்கள்" என்றான் (மாற்கு 16:6-7). தனிப்பட்ட பேதுருவின் பெயரைக் கூறியதின் மூலம் இயேசு தன்னை மன்னித்தார் என்று உற்சாகம் கொண்டு கல்லறைக்குள் ஓடினார். இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதை உணர்ந்து கொண்டார். பின்னர் சாயங்கால வேளையில் சீடர்களுக்கு காட்சி தந்தார். பின்பு ஒருநாள் ஏழு சீடர்கள் பேதுருவின் தலைமயில் மீன்பிடிக்க கலிலேயா கடலுக்குள் சென்றனர்.

"விடியற்காலமானபோது, இயேசு கலிலேயா கடலின் கரையிலே கரி நெருப்பு போட்டு அப்பதொடும் மீன்களோடும் காத்து நின்றார். அவரை இயேசு என்று, சீடர்கள் தாமதமாகவே அறிந்து கொண்டார்கள். இயேசு, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று மூன்று முறை கேட்டார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றான். இயேசு பேதுருவை நோக்கி: "என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்று சொல்லி திருசைபையை பேதுருவிடம் இறை ஒப்படைப்பு செய்தார். இவ்வளவு தடுமாற்றம் மற்றும் பின்மாற்றங்களுக்கு பின்பதாக சீமோன் இப்பொழுது பேதுருவாய் (கேபாவாய்) பாறை போன்று திடமுள்ளவராய் மாறியிருந்தார்.

பேதுருவின் வாழ்க்கை வரலாறு நாளைய தினம் தொடரும்..!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment