Monday, 23 September 2013

அழைக்கப்பட்டவராக இல்லாமல், நீங்கள் தெரிந்து கொள்ளப்பட......!

வேதப் புத்தகத்தில் மத்தேயு 20:16   இல்... “ இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்”

அன்பான சகோதர, சகோதரிகளே!

அழைக்கப்பட்டவர்கள் அநேகம் பேராக இருந்தாலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சில பேர்தான்.

உதாணரமாக ஒரு அரசாங்க வேலைக்காக தேர்வு எழுதுகின்றோம். அந்த தேர்விலிருந்து சில பேர் தெரிவு செய்யப்பட்டு, நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள். அந்த நேர்முகப் பரீட்சையிலும் சில பேரை தெரிவு செய்து வேலைக்கு எடுப்பார்கள்.

அதுபோல தான் பரலோகத்திற்கு தெரிந்து கொள்ளப்படுவதென்பது இலகுவான காரியமல்ல. இறுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசிக்க வேண்டும்.
ஆனால் பாதாளத்திற்குப் போகிற வாசல் பெரிய வாசலாக இருக்கின்றது. அங்கு நிறைய வாசல்கள் இருக்கின்றன.

ஆனால் பரலோகத்திற்கு ஒரேயோரு வாசல்தான். ஜீவனுக்குப் போகிற வழியே மகிமையானது.  சத்தியமானது. நித்தியத்திற்கு கொண்டு செல்லக் கூடியது..
அதற்காக தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பாதாளத்திற்கு தப்புகிறார்கள். அதற்காக தெரிந்து கொள்ளப்டடவர்கள் பாக்கியவான்கள். பாக்கியவதிகள்.


இந்த உலகத்திற்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது. அது போல ஒரு முடிவும் இருக்கின்றது. நாம் அழைக்கப்பட்டால் மட்டும் போதாது. தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பரலோக பவனி வரும் போது வெண்மையான குதிரையில் செல்லும் இயேசுவோடு சேர்ந்து போகும் அந்தக் கூட்டத்தில் காணப்படுகிறவனாக நாம் காணப்பட வேண்டும்.

தேவனுடைய பிள்ளைகளே இந்த பூமியிலே வாழ்வதற்கு நமக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வாய்ப்பை நாம் பாவத்திற்குள்ளாக்காமல், நித்திய ஜீவனுக்குள் போகிறவர்களாக இருக்க வேண்டும்.

சோர்ந்து போய் இருக்கும் தேவ பிள்ளைகளே, பல சஞ்சலங்களாலும் கவலைகளாலும் ஜெபிக்க முடியாமல் இருப்பவர்களே...

இந்த உலகத்திலும் நீ போக வேண்டிய தூரம் வெகு தூரமாகவுள்ளது.

கர்த்தர் எலியாவை எழுப்பின போது.. எலியா தன்னை இடைவெட்டிக் கொண்டு 40 நாட்கள் இரவும் பகலும் ஓடி தேவ பர்வதத்திற்கு வந்து சேர்ந்தார். சோர்ந்து போன அவனை 40 மைல் தூரம் தேவ பர்வதம் வரும் வரும் மட்டும் ஓட வைத்தார்.

நமக்கு ஆகாரமாக ஆவிக்குரிய மன்னாவைத் தருகிற ஆண்டவர்.. நாம் சோர்ந்து பொகாமல் ஓட வேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார்..

அது தான் ஆண்டவர் சொல்கிறார் அழைக்கப்பட்டவர்கள் அநேகம் பேர் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
நம்முடைய பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுத்தியிருக்கிறது என்வென்று சிந்தித்துப் பாருங்கள்..

இன்றைக்கும் ஆண்டவரை் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார்... வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்...

என்னண்டடை வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார்.

நாம் ஆண்டவரின் பாதத்தில் வந்துவிட்டோம்... அந்த அழைக்கப்பட்ட கூட்டத்திலிருந்து தெரிந்து கொள்ளபட்ட கூட்டத்திற்கு வர வேண்டும்.

நாம் ஜெபத்தில் வல்லமையுள்ளவர்களாக...இருக்க வேண்டும்..
பரிசுத்தத்திற்காக...
பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்காக...
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபைக்காக.. அனுதினமும் ஜெபிக்க வேண்டும்..
ஆண்டவரின் சமூகத்தினண்டையில் புகவேண்டும்.. ஆமென்.

No comments:

Post a Comment