Monday, 28 October 2013

தீர்க்க தரிசனங்கள் வார்த்தைகளை கற்றுக் கொள்ளும் போது விசுவாசிகள் சுத்திகரிக்கப்படுகிறார்கள்

பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவி பயன்படுத்தும் கருவி தான் தீர்க்க தரிசன வார்த்தைகளை படிப்பது.
யோவான் கூறினது போல  இயேசுவின் சீக்கிரமான வருகை!  அவரில் நம்பிக்கையாய் இருக்கிற யாவரும் - “ அவர் சுத்தமாய் இருக்கிறது போல தங்களையும் சுத்திகரித்துக் கொள்வார்கள்” (1யோவான்3.3)

நம்மில் அனேகருக்கு சோதனை உண்டு......
இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது இவைகளை செய்து கொண்டிருக்க வேண்டுமா,.. ?”

பதில்- ” இல்லை” என்றால் சோதனையை புறக்கணிக்க இலகுவாகக் காணப்படும்.

நம்பிக்கையற்ற யுகத்தில் தன்னம்பிக்கை

நாம் வாழும் உலகத்தில் நம்பிக்கை கிடையாது. முழு உலகமும் சமாதானத்திற்காக ஏங்குகிறது. ஆனாலும் சமாதானம் என்பதை அறியாத வர்க்கம் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகத்தில் அதிகமாக சிந்திப்பவனும் கூட தீர்வைக் காணாதிருக்கிறான். இவ்வுலகத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை தேவன் எவ்விதம் திட்டமிட்டிருக்கின்றார் என்பதை இந்த தீர்க்க தரிசனமானவைகள் அறிகிறது மட்டுமல்ல. எதிர்காலத்தைக் குறித்து பயமின்றி உறுதியான நம்பிக்கையையும் வைத்திருக்கிறார்கள்.

இந்த எதிர்காலத்தின் சம்பவங்களைக் குறித்து ஒன்றும் அறியாத கிறிஸ்தவர்கள் எதிர்காலதிற்கு முகம் கொடுக்கும் பொழுது  சிறிதளவான நம்பிக்கையை வைத்திருப்பார்கள் .

தீர்க்கதரிசனங்களைக் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சமாதானத்துடன் முகம் கொடுப்பார்கள்.

 கள்ள உபதேசங்களுக்கு விசுவாசிகள் காத்துக் கொள்ளப்படுதல்.

கர்த்தர் முன் குறித்து கூறியதாவது,

அநேக கள்ளக் கிறிஸ்தவர்களும் கள்ளத்த் தீர்க்க தரிசிகளும் கடைசிக் காலத்தில் காணப்படுவார்கள். எதிர்காலத்தின் சம்பவங்களைக் குறித்து.

அறியாத விசுவாசிகள். இலகுவாக வஞ்சிக்கப்படுவார்கள். ஆனாலும் தீர்க்க தரிசன படிப்பினைகளை தேவ வார்த்தையில் அறிந்த விசுவாசிகள் பாதுகாக்கப்படுவார்கள்.

இன்றைய வேத வசனம்

“உள்ளவனெவனே அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனே அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்”
மார்க் 4.25 

இன்றைய வேத வசனம்


Monday, 21 October 2013

இன்றைய வேத வசனம்

 “நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய    கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.”
ஏசாயா 62.3

 ”And you will be a fair crown in the hand of the Lord, and a king's head-dress in the hand of your God.”

Isaiah 62.3

Sunday, 20 October 2013

Voice of God Church in Qatar - "MIRACLE NIGHT"

                                     


இன்றைய வேத வசனம்

“அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” 
ரோமர் 12:11

 “Be not slow in your work, but be quick in spirit, as the Lord's servants”

 Romans 12:11

Saturday, 19 October 2013

இன்றைய வேத வசனம்

“உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.”
லுக் 11:41

“But if you give to the poor such things as you are able, then all      things are clean to you.” 
Luke 11.41  

Friday, 18 October 2013

தீர்க்கதரிசனங்கள் சுவிசேஷத்துவ சபையை முன்னேற்றுகிறது

தீர்க்க தரிசனம் மிகவும் கவனமாய் படித்த காலகட்டத்தில் தான் சுவிசேஷம் கூறுவதற்கு அதிக காலகட்டமாக இருந்ததது.
இயேசு மீன வருகிறார் என்று கற்பித்த காலப் பகுதியில் ஆதி சபை சுவிசேஷத்துவ அக்கினியுடன்  மூன்று நுற்றாண்டு காலமாக நிலைத்து நின்றது.
அதன் பின் 19ம் நுற்றாண்டில்  வேதாகமத்தில் தீர்க்க தரிசனங்களை இன்னும் கற்றுக் கொள்ள வேண்டுமென இன்னும் கண்டுபிடித்துள்ளனர். 
 
இக்கால கட்டத்தில் சுவிசேஷம் கூறும் பார்வையுடன் நவீன சபை யுகம் ஆரம்பித்தது.

தீர்க்க தரிசன வார்த்தைகளை கற்றுக் கொள்ளும் போது விசுவாசிகள் சுத்திகரிக்கப்படுகிறார்கள்
 
பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவி உபயோகிக்கும் ஒரு கருவிதான் தீர்க்க தரிசன வார்த்தைகளை படிப்பது.
யோவான் கூறினது போல இயேசுவின் சீக்கரமான வருகை அவரில் நம்பிக்கையால் இருக்கிறவர்கள்  யாவரும் அவர் சுத்தமாய் இருப்பது  போல தங்களையும் சுத்திகரித்துக் கொள்வார்கள். (1 யோவன் 3.3)

நம்மில் அநேகருக்கு சோதனை உண்டு!
இயேசு மீண்டும் வரும் பொழுது இவைகளை செய்து கொண்டிருக்க வேண்டுமா? ...!
பதில் “ இல்லை” என்றால் சோதனையை புறக்கணிக்க இலகுவாகக்  காணப்படும்........
 
தொடரும்...

இன்றைய வேத வசனம்


நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் காரணங்கள்

1. அறிவு  அதிகரித்தல்  (தானி 12:-4)
2. பஞ்சம் அதிரித்தல்  (லூக் 21:11)
3. தொலைக்காட்சி  (வெளி 11:8-9)
4.சுபயோகப் பிரியம்  (2தீமோ3:4)
5.ஐரோப்பிய ஒன்றியம்  (தானி 2:7)
6.கணனி தொழில் நுட்பம் (வெளி  (13:7)
7.எருசலேமை மீள் சுவிகரித்தல் (லூக் 21:24
8.தீமையான களியாட்டு  (2தீமோ 3:4)
9.பொருளாசை  (2தீமோ 3:2)
10.தற்பிரியம் அதிகரித்தல் (2தீமோ3:2)
11.2ம் வருகையை நிராகரித்தல் (2பேதுரு 3:4-5)
12.வன்முறை, சட்டமின்னையும் அதிகரித்தல் (மத் 24:12)
13.நல்லோரை பகைக்கிறவர்கள் ( 2தீமோ 3:3, ஏசா 5:20)
14.போதை வஸ்து அதிகரித்தல்( 2தீமோ 3:3)
15.தேவ தூசனம் அதிகரித்தல் (2தீமோ 3:1-4)
16.நம்பிக்கையின்மை அதிகரித்தல் (2தீமோ 3:1)
17.வானத்தில் அடையாளம் தென்படுதல் (லூக் 21.11-25)
18.இயற்கையின் நிலையற்ற தன்மை அதிகரித்தல் (மத் 24.7, லூக்21.11)
19.வழிபாட்டு முறைகள் பரவுதல் ( மத் 24.11)
20.பொய்யான கிறிஸ்துக்கள் அதிகரித்தல் (மத் 24.5)
21.சபையில் விசுவாசத்தைக் கைவிடும் நிலை உருவாதல் (2தீமோ.4.3-5)
22.இயேசுவுக்கு விரோதமான தாக்குதல்கள் அதிகரித்தல் (ரோமர் 1.18-19)
23.வேதாகமத்திற்கு விரோதமான தாக்குதல்கள் அதிகரித்தல் ரோமர் 1.18-19
24.கிறிஸ்தவர்களுக்கு எதிரான உபத்தரவங்கள் (மத் 24.9)
25.பிசாசின் உபதேசம் அதிகரித்தல் (1தீமோ 4.1)
26.யுத்தமும் யுத்தத்தின் செய்திகளும் (மத் 24.6)
27.பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்கள் (லூக் 21.26)
28.கொள்ளை நோய்கள் அதிகரித்தல் (லூக் 21.11)
29.செயற்கைக் கோள் தொழில் நுட்பம் (வெளி 11.8-9)
30. முழுமையடையாத உண்மைகள் (9வெளி-13.14-15)
31. கிழக்கில் இராணுவப்பலன்  (வெளி 9.16-12)
32. உலக அரசாங்கத்தின் முன்னோக்கிய அசைவு  (தானி 7.23,26)
33. யூதர்கள் மீண்டும்கூட்டு சேர்க்கப்படுதல் (ஏசா-11.10-12)
34. இஸ்ரவேல் மீள் ஸ்தாபிக்கப்படுதல் (ஏசா- 66.7)
35. இஸ்ரவேல் நிலம் மீள் கைப்பற்றப்படுதல் (ஏசா- 36.34-35)
36. எபிரேய வேதாகமம் உயிர் நீட்சியடைதல் (செப்  3.5, எரே 31.23)
37. இஸ்ரவேல் இராணுவம் பலனடைந்து பரிசுத்தமாகுதல் (சகரியா 12.6)
38. ரஷ்யா இஸ்ரவேலுக்கு அச்சுறுத்தலாகுதல் (எசே 38.39)
39.வேதாகம தீர்க்க தரிசனங்களை விளங்கிக் கொள்ளுதல் (தானி 12.8-9)
40.தாவீதினுடைய துதி ஆராதனை உயிர் நீட்சியடைதல் (ஆமோஸ் 9.11)
41.மேசியாவின் யுத்தத்துவம் உயிர் நீட்சியடைதல் (ரோமர் 9.29)
42.உலகலாவிய ரீதியில் சுவிசேஷம் அதிகரித்தல் (மத் 24.14)
43.அரேபியர் இஸ்ரவேலுக்கு அச்சுறுத்தல் (எசே 35.36)
44.ஒழுங்கீன்மை அதிகரித்தல் (மத் 24.37)
45.பரிசுத்த ஆவி பொழியப்படுதல் (யோவேல் 2.28-29)
46.கடவுள் படைப்பை நிராகரித்தல் (ரோமர் 1.18-22)

இவற்றை விளங்கிக் கொள்ள தொடர்ந்தும் இணைந்திருங்கள்....

Wednesday, 16 October 2013

இன்றைய வேத வசனம்

“ ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.”
பிலிப்பியர் 1.29  

“Because to you it has been given in the cause of Christ not only to have faith in him, but to undergo pain on his account:”
Philippians 1.29 

இன்றைய வேத வசனம்


Monday, 14 October 2013

இன்றைய வேத வசனம்

"உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்." 1 யோவான் 2.17 

 "And the world and its desires is coming to an end: but he who does God's pleasure is living for ever."  1 John 2.17 

Saturday, 12 October 2013

இன்றைய வேத வசனம்

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.(2 கொரிந்தியர் 3:18)

Friday, 11 October 2013

இன்றைய வேத வசனம்

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.(உபாகமம் 28.1)

Wednesday, 9 October 2013

இன்றைய வேத வசனம்

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. (ரோமர் 8.9)

Tuesday, 8 October 2013

இன்றைய வேத வசனம்

“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.” (மத்தேயு 5.3)

Happy are the poor in spirit: for the kingdom of heaven is theirs.(Matthew 5.3)

Monday, 7 October 2013

இன்றைய வேத வசனம்

கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார். (ஏசாயா 54.6)

Isaiah 54.6  For the Lord has made you come back to him, like a wife who has been sent away in grief of spirit; for one may not give up the wife of one's early days.

Sunday, 6 October 2013

இன்றைய வேத வசனம்

“கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.” (நீதிமொழிகள் 21.30)

Friday, 4 October 2013

இன்றைய வேத வசனம்

 "சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக." (1தெச 5.23 )

Thursday, 3 October 2013

இன்றைய வேத வசனம்

நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். (ரோமர் 1:9)

ஆவிக்குரிய வரங்கள் குறித்து.....

வேதப் புத்தகத்தில் “அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.( 1 கொரிந்தியர் 12.1 ) என்றும்,
“அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.”( 1 கொரிந்தியர் 14.1 )என்றும் குறிப்பிட்டிருப்பதை நாம்ட வாசிக்கின்றோம். 

அந்தவகையில், கிறிஸ்துவுக்கும் அன்பானவர்களே,

ஆவியின் வரங்கள்  குறித்து நாம் அறிந்திருக்க வேண்டியது மட்டுமின்றி அவற்றைப் பெற்றுக் கொள்ள ஆத்ம பாரத்தோடு ஆண்டவரிடத்தில் ஜெபிக்க வேண்டும்.

வரங்கள் மீது ஒரு தாகம் ஒரு வாஞ்சை, ஆண்டவருக்காக நான் எதையாகிலும் செய்யனுமே உலகத்தில் வாழ எனக்கொரு வாய்ப்பைக் கொடுத்து, இரட்சிப்பை எனக்கு கட்டளையிட்டு, தம்முடைய பிள்ளையாய் மாற்றிய அவருக்காக நான் ஏதாவது ஒரு பெரிய காரியத்தைச் செய்ய வேண்டும், ஆவியின் வரங்கள் எனக்கு வேண்டும் என ஜெபிக்க வேண்டும்.

வேதப்புத்தகத்தில் வரங்கள் யாருக்கு கொடுக்கப்படகிறது என்று பார்த்தால், வாஞ்சை உள்ளவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது.

ஆவிக்குரிய வரங்களை விரும்பாதவர்களிடத்தில் ஆண்டவர் கொடுப்பதில்லை. வாஞ்சை உள்ளவர்களை ஆண்டவர்கள் தேடி வந்து, அவர்களை அபிசேகம்ட பண்ணுகிறார்.

வரங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியானவர் நமக்கு தந்தவை.
இயேசு கிறிஸ்துவோடு நாம் விடாமல் தொடர்ந்து இணைந்ததிருந்தால், ஆண்டவரிடத்திலிருந்து தெய்வீக வல்லமை பொருந்திய ஆவியின் வரங்கள் இறங்கி வரும்போது, ஆண்டவருக்கு கனி கொடுக்கின்றவர்களாக இருப்போம்.

தேவனோடு உள்ள ஆழமான ஐக்கியம் வரங்களைப் பெற்றுக் கொள்ள அவசியமாக இருக்கின்றது.

ஆண்டவருடைய ஸ்தானாபதியாக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். ஆண்டவருடைய ஊழியத்தைத் தொடர்ந்து, அவருடைய அடிச் சுவட்டைப் பின்பற்றும் படி நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
ஆண்டவருடைய சொந்தப்பிள்ளைகளாக, அவருடைய வாரிசுகளாக, அவருடைய சுதந்திரங்களாக அவர் உங்களை அபிஷேகம் பண்ணியியிருக்கின்றார்.

ஆண்டவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளும் முன் சொன்னார், என்னை விசுவாசிக்கன்றவன், நான் செய்த கிரியைகளை தானும் செய்வான் என்றார்.

நீங்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே பெரிய காயங்களைச் செய்யவேண்டுமென்று. ஆண்டவர் ஆவலோடு எதிர்பார்க்கின்றார்.

எல்லா ஆவியின் வரங்களுக்குப் பின்னால் விசுவாசம் என்கிற வல்லமை உண்டு.

நசரேனாயகிய இயேசுவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும், அபிசேகம் பண்ணினால், தேவன் அவருடனே கூட இருந்தபடியால் நன்மை செய்கிறவராக, அற்புதங்களை செய்கிறவராக அபிஷேகம் பண்ணினார்.

அவரை அபிசேகம் பண்ணின அதே ஆவியானவர் உங்களை அபிசேகம் பண்ணும்போது, ஆண்டவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்,

சாத்தான் தன்னுடைய இராஜ்யத்தைக் கண்டவேண்டுமென்று அநேக காரியங்களை செய்யும் போது, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், அபிசேகத்தாலும் வரங்களாலும் நிரம்பி,  ஆண்டவருக்காக எழும்பிப் பிரகாரிக்க வேண்டும்.

நம்முடைய தேவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் என்று அழைக்கப்படகிறார்.

ஆவியின் வரங்களைப் பெறவேண்டுமெனனின் தேவனினின் ஊழியக்கார்களோடு, சபைகளோடு, ஐக்கியமாக இருத்தல் வேண்டும்..
இரண்டாவதாக, எதன்மேல் உங்களுக்கு ஒரு தாகம் இருக்கின்றதோ, ஆண்டவர் அதைப் பார்த்து, தான் ஆவியின் வரங்களைக் கொடுப்பார்,

ஆத்ம தாகத்தோடு உபவாசம் இருந்து ஜெபம் பண்ணி, வேண்டுதல் செய்ய வேண்டும்.

ஆண்டவரே என்னைப் பயன்படுத்தும் என்று இன்றைக்கே நீங்கள் எழும்புவீர்களானால், என்னை ஆவியின் வரங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன் என்று ஆண்டவரிடத்தில் வேண்டுதல் செய்யுங்கள்.
அவர் உங்களை அழைத்த தேவன் ஒரு போதும் கைவிடமாட்டார்.

ஊழியக் காரர்கள் மேலும் ஊழியக் காரிகள் மேலும் விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்ன ஆண்டவர்.

கடைசிக்காலம் வர வர ஆண்டவர் தமக்கென்று கூட்டத்தை ஏற்படுத்த ஆவிக்குரிய வரங்களை ஊற்றிக் கொண்டிருக்கின்றார்.

ஆவியின் வரகங்ளுக்கு அர்ப்பணிக்கின்றேன் என ஒப்புக் கொடுப்பீர்களானால், வைராக்கியத்தை தந்தருளுவார். வரங்களைத் தந்தருளுவார். ஆவியின் வரங்களால் உங்களை அபிஷேகித்து பயன்படுத்துவார்.. ஆமென். அல்லேலுயா..!

Tuesday, 1 October 2013

இன்றைய வேத வசனம்

" கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். ( சங்கீதம் 119:33)

"O Lord, let me see the way of your rules, and I will keep it to the end." (Psalms 119.33)