Saturday, 10 January 2015

மாரநாதா இயேசு.. சீக்கிரம் வரப் போகின்றார்

பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். லூக்கா 21: 26-28.

நாம் வாழும் இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ முடியாத நிலை விரைவில் உண்டாகும் என எல்லா மக்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுளின் உள்ளத்திலும் பயம் எழுந்துள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்டவெளியில் உள்ள பூமியைப் போல் எவ்வளவு கிரகங்கள் உள்ளன என்று ஆராயும்படியாக, கடந்த 2009ம் ஆண்டு விண்வெளி தொலை நோக்கியுடன் கூடிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்பினர். கெப்லர் விண்கலம் மூலம் அண்டவெளியில், ‘கோல்டிலாக்ஸ்’ என்ற பகுதியில் 8 புதிய கிரகங்கள் அதன் நட்சத்திரங்களை சுற்றிக் கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் தண்ணீர் இருக்கலாம் என்பதால், உயிர் வாழும் சூழலுக்கு வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக 2 கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் 8 புதிய கிரகங்கள் சுற்றிக் கொண்டிருப்பதை, நாசா விஞ்ஞானிகள் கெப்லர் விண்கலத்தின் தொலை நோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர். இதில் தண்ணீர் இருக்கலாம் என்பதால் உயிர்வாழும் சூழலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதில் 2 கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்க்கு கெப்லர் 438பி, கெப்லர் 442பி என பெயரிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் சிவப்பு நிற நட்சத்திரங்களை சுற்றிக் கொண்டிருக்கின்றன. நாம் வாழும் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்களை எடுப்பது போல, கெப்லர் 438பி என்ற கோள் அதன் நட்சத்திரத்தை சுற்றி வர 35 நாட்களும், கெப்லர் 442பி கோள் அதன் நட்சத்திரத்தை ஒரு முறை சுற்ற 112 நாட்களும் எடுக்கின்றது. நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கெப்லர் 438பி என்ற கோளுக்கு ஒரு ஆண்டு என்பது 35 நாட்களும், கெப்லர் 442பி என்ற கோளுக்கு ஒரு ஆண்டு என்பது 112 நாட்களும் ஆகும். இந்த குறுகிய நாட்களில் தான் குளிர் காலம், வெயில் காலம், மழை காலம், பணிக் காலம் என மாறி மாறி வரும். நாசா விஞ்ஞானிகள் இங்கு உயிர் வாழும் சூழலுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினாலும் நிச்சயமாக இங்கு மனிதர்களால் வாழ முடியாது.

இந்த கிரகங்களில் உயிர்வாழும் சூழல் இருக்கவேண்டும் என்றால், பூமி பெறும் சூரிய ஒளி அளவுக்கு சமமாக அதன் நட்சத்திரங்களில் இருந்து அந்த கோள்கள ஒளியைப் பெற வேண்டும். அதிக ஒளியை பெற்றால் அதில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடும். குறைந்த ஒளியை பெற்றால், தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறிவிடும். கெப்லர் 438பி கோள், பூமியை விட 40 சதவீத ஒளியை கூடுதலாக பெறுகிறது. கெப்லர் 442பி கோள், பூமியைவிட 66 சதவீத ஒளியை கூடுதலாக பெறுகிறது. ஆகவே நிச்சயமாக இங்கு மனிதர்களால் வாழவே முடியாது.

வேத வசனம் சொல்கின்றது மனிதன் பூமியின்மேல் வருகின்ற ஆபத்துகளான கொள்ளை நோய்கள், அனு ஆயுதங்கள், அதிரவைக்கும் தீவிரவாதம் என எல்லாவற்றயும் பார்த்து பயந்து, எப்படியாவது பூமியைப்போன்ற வேறொரு கிரகத்தை கண்டுபிடித்து அங்கு சென்று பயமின்றி சந்தோஷமாய் வாழ ஆசைப்படுகின்றான் மனிதன். ஆனால் இன்னும் அதற்கான வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் “பரலோகம்” என்ற கிரகத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். அங்கே "நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்" ஏசாயா 35:10. மாரநாதா இயேசு.. சீக்கிரம் வரப் போகின்றார்.
ஆமென்..அல்லேலூயா

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment