Saturday, 14 June 2014

கட்டுகளை அறுக்கும் கர்த்தர்

அந்நாளில் நான் உன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.  அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.  எரேமியா 30 :  8

தேவன் நம்முடைய ஜனங்களாய் நம்மை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிதான ஆசீர்வாதமாக உள்ளது.  முதலாவது தேவன் தம் ஜனங்கள் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார்.  நம்மை தேவன் தம்முடைய ஜனங்களாய் மாற்ற முதலாவது அவர் நம் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார்.  இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு கானான் தேசத்தை கொடுக்கிறார்.  வல்லமையுள்ள தேவன் இறங்கி வந்து ஓரேப் பர்வதத்தில் மோசேயை சந்தித்தபோது மோசேயிடம் முதலாவது நான் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொள்வேன் என்று வாக்குரைத்தார்.   அதன்படி பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்ட அந்த இரவில் மாபெரும் இரட்சிப்பை கட்டளையிட்டார்.  புதிய ஏற்பாட்டில் தேவன் நம்மை பாவங்கள், சாபங்கள் ஆகிய கட்டுகளிலிருந்து விடுவிக்க தம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை பழுதற்ற ஆட்டுக்குட்டியாக    நமக்காக தந்தார்.

அதன் மூலமாக நாமெல்லாரையும் தம்முடைய சொந்த ஜனமாக ஏற்றுக்கொண்டார்.  அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவா 1 : 12)  நாம் முதலாவது நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போதுதான் நாம் அவர் ஜனங்களாக மாறுகிறோம்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறப்பதால், ஒழுங்காக ஆலயத்திற்கு போவதினால் மடடும் அல்ல இயேசுவை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அவர் நம்மீது உள்ள பாவத்தின் கட்டுகளை சாபத்தின் கட்டுகளை அறுத்து இனி நம்மை ஒருவரும் அடிமை என்று கூறாதபடி நம்மை தம் சொந்த ஜனமாக ஏற்றுக்கொள்கிறார்.  ஆம் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டுகள் அறுக்கப்பட்டு அவர் ஜனங்களாய் இருப்பது எத்தனை மகிழ்ச்சி.

ஜெபம்: நான் உன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று வாக்கு உரைத்த சர்வ வல்ல தேவனாம் பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியானவரே, இந்த நாளிலும் கூட எனது நிழலின் மறைவிலே என்னை பின் தொடர்ந்து வருகின்ற பாவ நுகத்திலிருந்து என்னை விடுவித்தருளும். நீர் என்னை உம்முடைய மகனாய் மகளாய் தெரிந்து கொண்டமைக்காக நன்றி. நீர் விரும்பும் மகனாக மகளாக வாழ என்னை அர்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்
 


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment