இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். - (மாற்கு 9:23).
ஸ்மித்விகிள்ஸ்வொர்த் என்னும் தேவ ஊழியர், தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டவர். ஒரு நாள் அவர், இரண்டு கால்களையும் இழந்த ஒரு செல்வந்தரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். விருந்து மேஜையில் இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது ஊழியர் கூறினார், 'சகோதரனே தேவன் உங்களுக்கு மறுபடியும் கால்களைக் கொடுக்க விரும்புகிறார்' என்று. அதைக் கேட்ட செல்வந்தர் நம்பிக்கையற்றவராக 'எனக்குத்தான் இரண்டு கால்களும் இல்லையே இனிக் காலகள் எப்படி வளரப் போகிறது' என்றார். ஊழியர், 'தேவன் யாவற்றையும் செய்ய வல்லவர்' என்றார். அவரது மனதில் விசுவாசம் துளிர்த்தது. ஆவியானவர் செல்வந்தரிடம் 'இன்றே கடைக்குப் போய் உன கால்களுக்கு காலணிகளை வாங்கிக் கொள்' என்றார்.
செல்வந்தர் கடைக்குப் போய் ஒரு ஜோடி காலணிகளைக் கேட்டார். கடைக்காரர் மேலும், கீழும் பார்த்தார். 'உங்களுக்குத்தான் கால்கள் இல்லையே எந்த அளவில் காலணி கொடுக்க வேண்டும்' என்றார். அவர் ஏழாம் நம்பர் காலணியை வாங்கி, வீட்டிற்கு வந்து தனது முடமான கால்களில் போட்டுப் பார்த்தார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அந்த அறையை நிரப்பிற்று. ஒரு நொடியில் மளமளவென்று கால்கள் வளர்;ந்தன. அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் வாங்கி வந்து ஏழாம் நம்பர் அளவில்தானே அவர் கால்கள் வளர்ந்தன. மகிழ்ச்சி தாங்க முடியாமல் துள்ளி குதித்தார். கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.
'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1) என்று வேதம் கூறுகிறது. ஆபிரகாமின் விசுவாசமும் அப்படியே இருந்தது. சாத்தியமில்லாத சூழ்நிலையிலும் விசுவாசிக்க இயலாத நேரத்திலும் தனக்கொரு பிள்ளை பிறப்பான் என்று விசுவாசித்தார்.
இன்றும் உங்களை அழுத்துகிற பிரச்சனையின் மத்தியில் தேவனை விசுவாசிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கும் சகோதரனே, சகோதரியே, நானிருக்கும் இந்த வியாதியில், பிரச்சனையில் எந்த அற்புதமுமே நடக்க முடியாது, என்னை விடுவிக்க யாராலும் முடியாது நான் வாழ்வதை விட சாவது மேல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ? என் பிரச்சனைக்கு முடிவே இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ?
இன்று அற்புதங்களை செய்யும் நம் தேவனை விசுவாசியுங்கள். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும், நீங்கள் கலங்கி கொண்டிருக்;கிற காரியத்தில் அற்புதங்கள் செய்து உங்களை விடுவிப்பது தேவனுக்கு இலேசான காரியம்.
நம் வியாதியின் மத்தியிலும், பிரச்சனைகளின் மத்தியிலும் அவற்றில் நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நம் தேவன் விரும்புவதில்லை. அவற்றை மாற்ற வல்லவர் அவரே என்ற விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்போது, இயற்க்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அற்புதம் செய்து, தேவன் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குவார். கர்த்தர் அற்புதம் செய்யும்போது, மற்றவர்கள் வியப்புக்குள்ளாகி, இந்தக் காரியம் எப்படி நடந்தது என்று ஆச்சரியப்படும் வண்ணம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.
ஆமென்.... அல்லேலூயா...!
நன்றி- அனுதின மன்னா
ஸ்மித்விகிள்ஸ்வொர்த் என்னும் தேவ ஊழியர், தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டவர். ஒரு நாள் அவர், இரண்டு கால்களையும் இழந்த ஒரு செல்வந்தரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். விருந்து மேஜையில் இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது ஊழியர் கூறினார், 'சகோதரனே தேவன் உங்களுக்கு மறுபடியும் கால்களைக் கொடுக்க விரும்புகிறார்' என்று. அதைக் கேட்ட செல்வந்தர் நம்பிக்கையற்றவராக 'எனக்குத்தான் இரண்டு கால்களும் இல்லையே இனிக் காலகள் எப்படி வளரப் போகிறது' என்றார். ஊழியர், 'தேவன் யாவற்றையும் செய்ய வல்லவர்' என்றார். அவரது மனதில் விசுவாசம் துளிர்த்தது. ஆவியானவர் செல்வந்தரிடம் 'இன்றே கடைக்குப் போய் உன கால்களுக்கு காலணிகளை வாங்கிக் கொள்' என்றார்.
செல்வந்தர் கடைக்குப் போய் ஒரு ஜோடி காலணிகளைக் கேட்டார். கடைக்காரர் மேலும், கீழும் பார்த்தார். 'உங்களுக்குத்தான் கால்கள் இல்லையே எந்த அளவில் காலணி கொடுக்க வேண்டும்' என்றார். அவர் ஏழாம் நம்பர் காலணியை வாங்கி, வீட்டிற்கு வந்து தனது முடமான கால்களில் போட்டுப் பார்த்தார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அந்த அறையை நிரப்பிற்று. ஒரு நொடியில் மளமளவென்று கால்கள் வளர்;ந்தன. அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் வாங்கி வந்து ஏழாம் நம்பர் அளவில்தானே அவர் கால்கள் வளர்ந்தன. மகிழ்ச்சி தாங்க முடியாமல் துள்ளி குதித்தார். கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.
'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1) என்று வேதம் கூறுகிறது. ஆபிரகாமின் விசுவாசமும் அப்படியே இருந்தது. சாத்தியமில்லாத சூழ்நிலையிலும் விசுவாசிக்க இயலாத நேரத்திலும் தனக்கொரு பிள்ளை பிறப்பான் என்று விசுவாசித்தார்.
இன்றும் உங்களை அழுத்துகிற பிரச்சனையின் மத்தியில் தேவனை விசுவாசிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கும் சகோதரனே, சகோதரியே, நானிருக்கும் இந்த வியாதியில், பிரச்சனையில் எந்த அற்புதமுமே நடக்க முடியாது, என்னை விடுவிக்க யாராலும் முடியாது நான் வாழ்வதை விட சாவது மேல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ? என் பிரச்சனைக்கு முடிவே இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ?
இன்று அற்புதங்களை செய்யும் நம் தேவனை விசுவாசியுங்கள். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும், நீங்கள் கலங்கி கொண்டிருக்;கிற காரியத்தில் அற்புதங்கள் செய்து உங்களை விடுவிப்பது தேவனுக்கு இலேசான காரியம்.
நம் வியாதியின் மத்தியிலும், பிரச்சனைகளின் மத்தியிலும் அவற்றில் நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நம் தேவன் விரும்புவதில்லை. அவற்றை மாற்ற வல்லவர் அவரே என்ற விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்போது, இயற்க்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அற்புதம் செய்து, தேவன் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குவார். கர்த்தர் அற்புதம் செய்யும்போது, மற்றவர்கள் வியப்புக்குள்ளாகி, இந்தக் காரியம் எப்படி நடந்தது என்று ஆச்சரியப்படும் வண்ணம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.
ஆமென்.... அல்லேலூயா...!
நன்றி- அனுதின மன்னா
No comments:
Post a Comment