நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. - (யாக்கோபு 4:14).
ஒரு வைத்தியர் தன்னுடைய நோயாளி ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று கிடைக்காமல், மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவகையாக டெலிபோன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, 'நீங்கள் செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வந்து விட்டது. உங்களுக்கு கெட்ட செய்தி முதலில் தெரிய வேண்டுமா? அல்லது அதைவிட மிக மோசமான செய்தி தெரிய வேண்டுமா?' என்று கேட்டார். அப்போது நோயாளி, 'முதலில் எனக்கு கெட்ட செய்தியை சொல்லுங்கள்' என்று கூறவும், டாக்டர், 'நீங்கள் இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பீர்கள்' என்று கூறினார். அதற்கு நோயாளி, ஐயோ, இதைவிட கெட்ட செய்தி ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் சொன்னீர்களே, இதை விட மோசமான செய்தி என்று, அது என்ன? என்று கேட்டபோது, டாக்டர், 'இந்த ரிசல்டை சொல்ல நான் நேற்றிலிருந்து முயற்சி செய்திருக்கிறேன்' என்று கூறினார்.
நம்முடைய வாழ்க்கை கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை அத்தனை குறைவானது. நாளை நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. மனிதனுக்கு தான் இன்று தான் மரிக்கபோகிறோம் என்று தெரிந்தால் கடைசி நிமிடம் வரை பாவம் செய்து, கடைசி நிமிடத்தில் மனம் திரும்பி கொள்ளலாம் என்று பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டே இருப்பான். அதனால்தான் கர்த்தர் அதை இரகசியமாகவே வைத்திருக்கிறார்.
உலகம் மனிதனை பிடித்து இழுத்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு தெரிந்த ஒரு உறவினர், சமீபத்தில் மிகவும் வியாதிப்பட்டு, மரணத்திற்க்கு சமீபித்திருந்தார். அப்போது வெளிநாட்டில் இருக்கும் அவருடைய மகளுக்கு சொல்லி, எல்லாரும் வந்து பார்த்து விட்டு போனார்கள். உறவினர்கள் எல்லாரும் வந்து பார்த்துவிட்டு, அவர் இன்னும் ஒரு நாள்தான் உயிரோடு இருப்பார் என்று கூறிவிட்டு மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனார்கள். இரண்டு நாட்கள் கழித்து, ஒன்றுமே சாப்பிடாத மனிதர், பல்லில்லாத வாயிலும் நொறுவை தீனி வாங்கி சாப்பிட ஆரம்பித்தார். தன் மனைவியிடம், பேங்க் புக்கை என்னிடம் கொண்டுவா, நான் உடல் நலமில்லாத போது என் பணத்தை எவ்வளவு செலவு செய்தாய் என கேட்க ஆரம்பித்தார். அதை கண்ட உறவினர்கள், வாயடைத்து போனார்கள். உயிருக்கு போராடினாலும், உலகமும், பண ஆசையும் மனிதனின் இருதயத்தை விட்டு போவதில்லை. நாளை மரித்தால் எந்த மனிதன் தன்னோடு கூட செல்வத்தை எடுத்து கொண்டு போவான்?
நம் வாழ்க்கை மிகவும் குறுகியதாக இருப்பதால், நாளை என்ன நடக்கும் என்று அறியாதவர்களாக நாம் இருப்பதால், கர்த்தரிடம் நம் வாழ்க்கையை அர்ப்பணித்து விட வேண்டும். அவர் நம் காலங்களை அறிந்திருக்கிறபடியால், அவரிடம் நாம் அர்ப்பணித்து விடும்போது, நமக்கு நேரிடும் எல்லா காரியஙகளையும் அவர் பொறுப்பெடுத்து கொள்வார்.
உலகத்திற்கும், பணத்திற்கும் அடிமைகளாக இருக்கும்போது, சாகும் நேரத்திலும் பணமும் உலகமும்தான் முன்னால் வருமே தவிர வேறு எந்த காரியங்களும் முன்னே வராது. கர்த்தரிடம் வாழ்க்கையை அர்ப்பணிக்காத வரை உலகம் தான் முன்னே நிற்கும். தான் ஒரு பாவி என்ற உணர்வோ, தேவனுடைய இரட்சிப்பு இல்லாவிட்டால் தான் நித்திய நித்தியமாய் எரிகிற அக்கினியிலே கிடப்போம் என்ற உணர்வோ வரவே வராது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்;தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்' (1யோவான் 2:15-17) என்று வேத வசனம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தை சாராமல் தேவனை மாத்திரம் சார்ந்து ஜீவிப்போமாக.
ஆமென்... அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா
ஒரு வைத்தியர் தன்னுடைய நோயாளி ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று கிடைக்காமல், மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் ஒருவகையாக டெலிபோன் மூலமாக அவரை தொடர்பு கொண்டு, 'நீங்கள் செய்த பரிசோதனைகளின் ரிசல்ட் வந்து விட்டது. உங்களுக்கு கெட்ட செய்தி முதலில் தெரிய வேண்டுமா? அல்லது அதைவிட மிக மோசமான செய்தி தெரிய வேண்டுமா?' என்று கேட்டார். அப்போது நோயாளி, 'முதலில் எனக்கு கெட்ட செய்தியை சொல்லுங்கள்' என்று கூறவும், டாக்டர், 'நீங்கள் இன்னும் ஒரு நாள் தான் உயிரோடு இருப்பீர்கள்' என்று கூறினார். அதற்கு நோயாளி, ஐயோ, இதைவிட கெட்ட செய்தி ஒன்றுமில்லை, ஆனால் நீங்கள் சொன்னீர்களே, இதை விட மோசமான செய்தி என்று, அது என்ன? என்று கேட்டபோது, டாக்டர், 'இந்த ரிசல்டை சொல்ல நான் நேற்றிலிருந்து முயற்சி செய்திருக்கிறேன்' என்று கூறினார்.
நம்முடைய வாழ்க்கை கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை அத்தனை குறைவானது. நாளை நமக்கு என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. மனிதனுக்கு தான் இன்று தான் மரிக்கபோகிறோம் என்று தெரிந்தால் கடைசி நிமிடம் வரை பாவம் செய்து, கடைசி நிமிடத்தில் மனம் திரும்பி கொள்ளலாம் என்று பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டே இருப்பான். அதனால்தான் கர்த்தர் அதை இரகசியமாகவே வைத்திருக்கிறார்.
உலகம் மனிதனை பிடித்து இழுத்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு தெரிந்த ஒரு உறவினர், சமீபத்தில் மிகவும் வியாதிப்பட்டு, மரணத்திற்க்கு சமீபித்திருந்தார். அப்போது வெளிநாட்டில் இருக்கும் அவருடைய மகளுக்கு சொல்லி, எல்லாரும் வந்து பார்த்து விட்டு போனார்கள். உறவினர்கள் எல்லாரும் வந்து பார்த்துவிட்டு, அவர் இன்னும் ஒரு நாள்தான் உயிரோடு இருப்பார் என்று கூறிவிட்டு மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனார்கள். இரண்டு நாட்கள் கழித்து, ஒன்றுமே சாப்பிடாத மனிதர், பல்லில்லாத வாயிலும் நொறுவை தீனி வாங்கி சாப்பிட ஆரம்பித்தார். தன் மனைவியிடம், பேங்க் புக்கை என்னிடம் கொண்டுவா, நான் உடல் நலமில்லாத போது என் பணத்தை எவ்வளவு செலவு செய்தாய் என கேட்க ஆரம்பித்தார். அதை கண்ட உறவினர்கள், வாயடைத்து போனார்கள். உயிருக்கு போராடினாலும், உலகமும், பண ஆசையும் மனிதனின் இருதயத்தை விட்டு போவதில்லை. நாளை மரித்தால் எந்த மனிதன் தன்னோடு கூட செல்வத்தை எடுத்து கொண்டு போவான்?
நம் வாழ்க்கை மிகவும் குறுகியதாக இருப்பதால், நாளை என்ன நடக்கும் என்று அறியாதவர்களாக நாம் இருப்பதால், கர்த்தரிடம் நம் வாழ்க்கையை அர்ப்பணித்து விட வேண்டும். அவர் நம் காலங்களை அறிந்திருக்கிறபடியால், அவரிடம் நாம் அர்ப்பணித்து விடும்போது, நமக்கு நேரிடும் எல்லா காரியஙகளையும் அவர் பொறுப்பெடுத்து கொள்வார்.
உலகத்திற்கும், பணத்திற்கும் அடிமைகளாக இருக்கும்போது, சாகும் நேரத்திலும் பணமும் உலகமும்தான் முன்னால் வருமே தவிர வேறு எந்த காரியங்களும் முன்னே வராது. கர்த்தரிடம் வாழ்க்கையை அர்ப்பணிக்காத வரை உலகம் தான் முன்னே நிற்கும். தான் ஒரு பாவி என்ற உணர்வோ, தேவனுடைய இரட்சிப்பு இல்லாவிட்டால் தான் நித்திய நித்தியமாய் எரிகிற அக்கினியிலே கிடப்போம் என்ற உணர்வோ வரவே வராது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்;தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்' (1யோவான் 2:15-17) என்று வேத வசனம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தை சாராமல் தேவனை மாத்திரம் சார்ந்து ஜீவிப்போமாக.
ஆமென்... அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா
No comments:
Post a Comment