"முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும், அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்". (லேவி 23:5-8)
ஏழு நிறம் கொண்ட வானவில் மழைக்கு பின் வந்து, தேவன் நோவாவுடன் செய்த உடன்படிக்கையை இன்றளவும் நிறைவேற்றி வருகின்றது. அதே போல கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஏழு பண்டிகைகளும் இன்றளவும் நிறைவேறிகொண்டு வருகின்றது. பஸ்கா மற்றும் புளிப்பில்லா அப்பப் பண்டிகை,இளவேனிற் பருவத்தின் அதாவது வசந்த காலத்தின் ஆரம்பத்திலும்; பெந்தெகொஸ்தே, அல்லது வாரங்களின் பண்டிகை, வசந்த காலத்தின் முடிவிலும்; எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப் பண்டிகை, எட்டு நாட்கள் அடங்கிய கூடாரப் பண்டிகை அல்லது அறுப்புக்கால பண்டிகை இலையுதிர்ப் பருவத்திலும் அனுசரிக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேவிற்கு திட்டவட்டமாய் அறிவித்தார். திருச்சபையும் இயேசு என்னும் வசந்த காலத்தில் தொடங்கி, அந்திகிறிஸ்து என்னும் இலையுதிர் காலத்தில் முடியப்போவதை இந்த பண்டிகைகள் நமக்கு தெளிவாக காண்பிக்கின்றன. அந்திகிறிஸ்து என்னும் இலையுதிர் காலத்தின் துவக்கம், திருச்சபை காலத்தின் நிறைவு என்பதை இந்த பண்டிகைகள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். அதாவது அந்திகிறிஸ்துவின் ஆட்சிக்கு முன்பாக மணவாட்டி திருச்சபை, மணவாளன் இயேசுவுடன், திருமண வீடாம் பரலோகத்திற்கு சென்றுவிடும்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட இந்த ஒவ்வொரு பண்டிகையும் புதிய ஏற்பாட்டு காலத்தில் நிறைவேறியும் நிறைவேறிக் கொண்டும், இனி வரும் நாட்களில் நிறைவேறப்போவதுமாக இருகின்றது. இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி பஸ்கா பண்டிகையும் பின்னர் அதைதொடர்ந்து பதினைந்தாம் தேதி முதல் இருப்பத்து இரண்டாம் தேதி வரை புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. இவைகளை புதிய ஏற்ப்பாட்டு கிறிஸ்த்தவர்களாகிய நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும். எனக்கும் அந்த பண்டிகைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று அநேர்கர் கேட்கின்றனர். இதுவரை ஏற்ப்பட்ட நான்கு இரத்த சிவப்பு சந்திரன்கள் அனைத்தும் யூதர்களின் பண்டிகை நாட்களில் தான் வந்து மிகப்பெரிய மாற்றத்தை இஸ்ரயேல் நாட்டிற்கு தந்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் பதினான்காம் தேதியில் ஒரு சந்திர கிரகணம் வந்ததது. அதன் பின்னர் இஸ்ரேலுக்கும், காசாவிற்கும் போர் உண்டானது. இவையெல்லாம் இயேசுவின் வருகை சமீபம் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக கான்பின்கின்றது. அதைப்பற்றி வரும் நாட்களில் விரவாக எழுதுகின்றேன்.
இயேசு யூத குலத்தில் பிறந்தவர் என்பதை நாம் நன்கு அறிவோம். அவரை அப்பா என்று அழைக்கும் நாம் நம்மை ஆவிக்குரிய யூதர்களாக மாற்றிக்கொள்ள முற்ப்படுவதில்லை. யூதர்கள் இயேசுவை புறக்கணித்ததால் அவர் நம்மை அந்த இடத்தில் வைக்க ஆசைப்படுகின்றார். நாமோ இன்றும் நான் இந்த ஜாதி, அந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு நாம் ஒரு ஆவிக்குரிய யூத ஜாதி என்பதை மறந்து விட்டோம். பவுல் எழுதுகின்றார், “ஒலிவ மரத்தின் சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாய் இருகின்றாய் (ரோமர் 11: 17) என்று புறஜாதியரான காட்டு ஒலிவமரமாகிய விசுவாசிகள், யூதர்களான இஸ்ரயேல் தேசத்து ஒலிவ மரங்களுடன் இயேசு ஓட்ட வைத்துள்ளதை அழகாக விளக்கியுள்ளதை சென்ற வாரம் பார்த்தோம்.
நாம் வாழும் உலகத்தில் அநேக பண்டிகைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான். நாம் அனைவரும் விமர்சையாக கொண்டாடி வரும் ஈஸ்டர் மற்றும் கிறிஸ்மஸ் கூட மனிதர்களால் ஒரு நினைவு கூறுதலுக்காக உருவாக்கப்பட்டதாகும். ஈஸ்டர் என்ற வார்த்தையோ கிறிஸ்மஸ் என்ற வேதத்தில் ஆதியாகமத்தில் தொடங்கி வெளிப்படுத்துதல் வரை எங்கும் குறிப்பிடவில்லை. கிறிஸ்மஸ் சமயத்தில் நாம் ஒலிப்பெருக்கிளை உபயோகிக்க காவல் துறையினரிடம் நாம் அனுமதி பெறத்தேவையில்லை. எல்லோரிடம் சென்று இயேசு உங்கள் வாழ்வில் பிறப்பாராக என்று தைரியமாக சொல்லலாம். இது போன்ற சலுகைகள் கிறிஸ்மஸ் நாட்களில் நமக்கு கிடைப்பதால் நாம் அதைப் நிச்சயமாக நற்செய்தியை அறிவிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது உலகம் சார்ந்த காரியமாக உள்ளது. ஆனால் ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்கள் கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஏழு பண்டிகைகளை அனுசரிக்காவிட்டாலும் அதைப் பற்றி நிச்சயமாய் அறிந்து கொண்டிருக்க வேண்டும். “ஏழு பண்டிகைகளும் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது” (கொலோ 2:16-17) என வேதம் நமக்கு தெளிவாக போக்கின்றது. இயேசுவே பண்டிகை நாட்களில் தேவாலயம் சென்றதாக வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.
ஆமென்..அல்லேலூயா
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
ஏழு நிறம் கொண்ட வானவில் மழைக்கு பின் வந்து, தேவன் நோவாவுடன் செய்த உடன்படிக்கையை இன்றளவும் நிறைவேற்றி வருகின்றது. அதே போல கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஏழு பண்டிகைகளும் இன்றளவும் நிறைவேறிகொண்டு வருகின்றது. பஸ்கா மற்றும் புளிப்பில்லா அப்பப் பண்டிகை,இளவேனிற் பருவத்தின் அதாவது வசந்த காலத்தின் ஆரம்பத்திலும்; பெந்தெகொஸ்தே, அல்லது வாரங்களின் பண்டிகை, வசந்த காலத்தின் முடிவிலும்; எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப் பண்டிகை, எட்டு நாட்கள் அடங்கிய கூடாரப் பண்டிகை அல்லது அறுப்புக்கால பண்டிகை இலையுதிர்ப் பருவத்திலும் அனுசரிக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேவிற்கு திட்டவட்டமாய் அறிவித்தார். திருச்சபையும் இயேசு என்னும் வசந்த காலத்தில் தொடங்கி, அந்திகிறிஸ்து என்னும் இலையுதிர் காலத்தில் முடியப்போவதை இந்த பண்டிகைகள் நமக்கு தெளிவாக காண்பிக்கின்றன. அந்திகிறிஸ்து என்னும் இலையுதிர் காலத்தின் துவக்கம், திருச்சபை காலத்தின் நிறைவு என்பதை இந்த பண்டிகைகள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். அதாவது அந்திகிறிஸ்துவின் ஆட்சிக்கு முன்பாக மணவாட்டி திருச்சபை, மணவாளன் இயேசுவுடன், திருமண வீடாம் பரலோகத்திற்கு சென்றுவிடும்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட இந்த ஒவ்வொரு பண்டிகையும் புதிய ஏற்பாட்டு காலத்தில் நிறைவேறியும் நிறைவேறிக் கொண்டும், இனி வரும் நாட்களில் நிறைவேறப்போவதுமாக இருகின்றது. இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி பஸ்கா பண்டிகையும் பின்னர் அதைதொடர்ந்து பதினைந்தாம் தேதி முதல் இருப்பத்து இரண்டாம் தேதி வரை புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. இவைகளை புதிய ஏற்ப்பாட்டு கிறிஸ்த்தவர்களாகிய நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும். எனக்கும் அந்த பண்டிகைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று அநேர்கர் கேட்கின்றனர். இதுவரை ஏற்ப்பட்ட நான்கு இரத்த சிவப்பு சந்திரன்கள் அனைத்தும் யூதர்களின் பண்டிகை நாட்களில் தான் வந்து மிகப்பெரிய மாற்றத்தை இஸ்ரயேல் நாட்டிற்கு தந்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் பதினான்காம் தேதியில் ஒரு சந்திர கிரகணம் வந்ததது. அதன் பின்னர் இஸ்ரேலுக்கும், காசாவிற்கும் போர் உண்டானது. இவையெல்லாம் இயேசுவின் வருகை சமீபம் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக கான்பின்கின்றது. அதைப்பற்றி வரும் நாட்களில் விரவாக எழுதுகின்றேன்.
இயேசு யூத குலத்தில் பிறந்தவர் என்பதை நாம் நன்கு அறிவோம். அவரை அப்பா என்று அழைக்கும் நாம் நம்மை ஆவிக்குரிய யூதர்களாக மாற்றிக்கொள்ள முற்ப்படுவதில்லை. யூதர்கள் இயேசுவை புறக்கணித்ததால் அவர் நம்மை அந்த இடத்தில் வைக்க ஆசைப்படுகின்றார். நாமோ இன்றும் நான் இந்த ஜாதி, அந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு நாம் ஒரு ஆவிக்குரிய யூத ஜாதி என்பதை மறந்து விட்டோம். பவுல் எழுதுகின்றார், “ஒலிவ மரத்தின் சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாய் இருகின்றாய் (ரோமர் 11: 17) என்று புறஜாதியரான காட்டு ஒலிவமரமாகிய விசுவாசிகள், யூதர்களான இஸ்ரயேல் தேசத்து ஒலிவ மரங்களுடன் இயேசு ஓட்ட வைத்துள்ளதை அழகாக விளக்கியுள்ளதை சென்ற வாரம் பார்த்தோம்.
நாம் வாழும் உலகத்தில் அநேக பண்டிகைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான். நாம் அனைவரும் விமர்சையாக கொண்டாடி வரும் ஈஸ்டர் மற்றும் கிறிஸ்மஸ் கூட மனிதர்களால் ஒரு நினைவு கூறுதலுக்காக உருவாக்கப்பட்டதாகும். ஈஸ்டர் என்ற வார்த்தையோ கிறிஸ்மஸ் என்ற வேதத்தில் ஆதியாகமத்தில் தொடங்கி வெளிப்படுத்துதல் வரை எங்கும் குறிப்பிடவில்லை. கிறிஸ்மஸ் சமயத்தில் நாம் ஒலிப்பெருக்கிளை உபயோகிக்க காவல் துறையினரிடம் நாம் அனுமதி பெறத்தேவையில்லை. எல்லோரிடம் சென்று இயேசு உங்கள் வாழ்வில் பிறப்பாராக என்று தைரியமாக சொல்லலாம். இது போன்ற சலுகைகள் கிறிஸ்மஸ் நாட்களில் நமக்கு கிடைப்பதால் நாம் அதைப் நிச்சயமாக நற்செய்தியை அறிவிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது உலகம் சார்ந்த காரியமாக உள்ளது. ஆனால் ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்கள் கர்த்தரால் உருவாக்கப்பட்ட ஏழு பண்டிகைகளை அனுசரிக்காவிட்டாலும் அதைப் பற்றி நிச்சயமாய் அறிந்து கொண்டிருக்க வேண்டும். “ஏழு பண்டிகைகளும் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது” (கொலோ 2:16-17) என வேதம் நமக்கு தெளிவாக போக்கின்றது. இயேசுவே பண்டிகை நாட்களில் தேவாலயம் சென்றதாக வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.
ஆமென்..அல்லேலூயா
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
No comments:
Post a Comment