Tuesday, 1 July 2014

மனதுருகும் கர்த்தர்

நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை;அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை. நெகேமியா 9: 19.

ஆறு மாதங்களில் இந்த புதிய மாதத்தில் நம்மை கண்ணின் மணி போல காத்துவந்த இயேசுவுக்கு கோடி ஸ்தோத்திரம். இஸ்ரயேல் மக்களை வனாந்திரத்தில் கைவிடாது பாதுகாத்த கர்த்தர், புதிய மாதமாகிய இந்த ஜூலை மாதத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து நடத்துவாராக.

இயேசு உலகில் வாழ்ந்த போது மக்கள் மீது மிகுந்த மனதுருக்கம் அடைந்தார். இதினிமித்தம் குருடர் பார்வையடைந்தனர், ஊமையர் பேசினார், குஷ்டரோகிகள் குணமடைந்தனர், பசியுற்றோர் போஷிக்கப்பட்டனர், ஊனமுடையோர் நடந்தனர். அவரது மிகுந்த இரக்கத்தினாலே நமக்காக அவரை சிலுவை வரை கொண்டு சென்றது.

தேவன் ஒருபோதும் நம்மை விட்டு பிரிவதில்லை. மாறாக நமது பாவங்கள் மீறுதல்கள் நம்மைத் தேவனிடமிருந்து பிரிக்கின்றது. இதனால் நமக்கு வேதனையும் துன்பமும் ஏற்படுகிறது. ஆனாலும் எந்த நிலைமையிலிருந்தும் மனம் திரும்பி வரும் போது நம்மை மன்னித்து தன் சொந்தப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வார். அவர் மன்னிக்கத் தயையுள்ளவர்.

கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர் (சங் 145:8).மற்றவர்களுக்கு தேவ இரக்கத்தை பெற்ற அவரது பிள்ளைகளாகிய நாமும் அவரைப்போல மனஉருக்கத்தை பரிதபிக்கும் மக்கள் மீதும் நாம் காட்ட வேண்டும். பகலிலும் இரவிலும் இஸ்ரயேல் மக்களை பாதுகாத்த கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிச்சயமாய்  பாதுகத்திடுவார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக!

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment