Tuesday, 29 July 2014

பொக்கிஷங்களைய உனக்குக் கொடுப்பேன்

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன். ஏசாயா 45:4

நேற்றைய தினம் ஒரு சகோதரன் வீட்டிற்கு ஜெபிக்க சென்றிருந்தேன். மிகவும் பொருளாதார நெருக்கடியில் வாழும் அந்த குடும்பத்தினர் மிகவும் மனம் தளர்ந்து காணப்பட்டனர். அப்பொழுது அவர்களுக்காக ஜெபிக்கையில், ஏசாயா 45:4-ம் வசனத்தில் சொல்லப்பட்டபடி “வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும்,ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்” என்ற வார்த்தையின் மூலம் அவர்களை தேற்றினார். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் அக்குடும்பத்தினர் விண்ணுலகில் தேவன் அவர்களுக்காய் வைத்திருக்கும் பொக்கிஷங்களை நினைத்து கவலை மறந்து தேவனை துதித்தனர்.

வேதத்தின் பழைய ஏற்ப்பாட்டில் ரூத் என்ற தரித்திர நிலையில் வாழ்ந்த பெண்ணைக் குறித்து வாசிக்கின்றோம். செல்வந்தராகிய போவாஸ் அந்த பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்து தனது மனைவியாக மாற்றிக்கொள்கிறார். புதிய ஏற்ப்பாட்டு காலத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போவாசுக்கு ஒப்பனையாக உள்ளார். தரித்திர நிலையில் வாழ்ந்த ரூத், மறுவாழ்வு கொடுக்கபடுகிற சபைக்கு ஒப்பனையாக உள்ளார். போவாஸ் ரூத்தை தனது மனைவியாக்கிக் கொண்டவுடன்,அவளுடைய தரித்திர நிலைமை மாறி, போவாசுக்க்ககுறிய எல்லா சொத்தும் அவளுக்கும் உரியதாக மாறியது. அதேபோல நாமும் கர்த்தருடைய ரகசிய வருகையில் சபையாக, அவருடைய மனடவாட்டியாக மீட்டுக்கொள்ளப்படுவோம். அப்பொழுது அவருடைய எல்லா சுதந்திரத்திற்கும் உரியவர்களாக நாம் காணப்படுவோம்.

“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை,அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்ற வெளிப்படுத்துதல் 21:4–ம் வசனத்தின் படி இயேசு நம் கண்ணீரைத் துடைத்து, துக்கமில்லாத, மரணமில்லாத மகிமையான வாழ்வை நமக்கு தந்தருள்வார். ஆகவே, “இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்? அவ்வுலக வாழ்வைக் காண காத்து நிற்கின்றேன்.” என்று உறுதியுடன் சொல்லத்தக்கதாயும் எதிர்நோக்குகின்ற எல்லாத் துன்பங்களும்,துயரங்களும், பாடுகளும், பயங்கரங்களும், கண்ணீரும், கவலையும் இனிவரும் மகிமைக்கு ஈடாகாது என்று உணர்ந்தவர்களாய், எதைக் குறித்தும் கலங்காமல் வாழ்க்கைஓட்டத்தை தொடர்ந்து ஓடுவோம்.

ஆமென்..அல்லேலூயா

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment