“எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1).
நீங்கள் மகிமையைக் கண்டால் மட்டும் போதாது, பிரதிபலித்தாலும் போதாது, நீங்கள் எப்பொழுதும் மகிமையின் அபிஷேகத்தால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எழும்பிப் பிரகாசித்து, இருளில் வாழும் ஜனங்களை தேவனிடத் திற்குக் கொண்டு வரவேண்டும். நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமா இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் எழும்பிப் பிரகாசிக்கும்போது நிச்சயமாகவே புறஜாதி மக்களும், ஜனங்களும் உங்களிடத்திற்கு வருவார்கள். கர்த்தர் வாக்குப்பண்ணி சோல்லுகிறார், “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்” (ஏசா. 60:3).
வெளிச்சத்தைத் தேடி ஈசல்கள் பறந்து வருவதைப் போல, நிச்சயமாகவே பிரச்சனை உள்ளவர்கள் ஜெபத்திற்காக உங்களைத் தேடி வருவார்கள். “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா.60:2). நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உங்களுடைய நேரங்களையும், வரங்களையும்,கிருபைகளையும், தாலந்துகளையும் கர்த்தருடைய ஊழியத்திற்கு செலவழிப்பீர்களோ,அவ்வளவுக்கவ்வளவு தேவ மகிமை உங்களை நிரப்பிக் கொண்டே இருக்கும். இறைக்கிற கிணறு ஊறிக்கொண்டே இருக்கும் அல்லவா? மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது.
ஆகவே, கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசியுங்கள். உபவாசித்து, ஜெபித்து, எப்பொழுதும் தேவ ஆவியினாலும், மகிமையினாலும் நிரப்பப்படுங்கள். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் சேட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப் படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). கர்த்தர் உங்களை எழும்பிப் பிரகாசிக்கச் சேயும்போது, எப்பொழுதும் கர்த்தரை உயர்த்திக்கொண்டே இருங்கள். கனத்தையும், மகிமையையும் அவருக்குச் சேலுத்துங்கள். “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:30) என்று சொன்ன யோவான் ஸ்நானகனைப் போல, எப்பொழுதும் அவருடைய நாமத்தை உயர்த்துங்கள். அப்பொழுது மகிமையின்மேல் மகிமையடைவீர்கள்.
நாம் அணைந்து, குளிர்ந்து கிடக்கிற விளக்கைப் போல அல்ல. தண்டின் மேல் வைக்கப்பட்டு வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் விளக்காக காணப்படவேண்டும். ஒரு விளக்கு எரிய வேண்டுமென்றால், அதின் திரி எப்பொழுதும் எண்ணெக்குள் மூழ்கி இருக்க வேண்டுமல்லவா?பரிசுத்த ஆவியானவராகிய எண்ணெக்குள் நம்முடைய உள்ளத்தின் ஆழம் எப்பொழுதும் மூழ்கி இருக்கும்போது, அபிஷேகத்தை உறிஞ்சி மேலே எழும்பிப் பிரகாசிப்பீர்கள். எண்ணெ குறைந்துவிட்டாலோ, அல்லது நின்று விட்டாலோ, விளக்கு அணைந்து விடும். ஆகவே பரிசுத்த ஆவியானவருடைய நிறைவு எப்பொழுதும் நம்முடைய ஆவியில் இருக்கட்டும்
ஆமென் .. அல்லேலூயா !
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி - அன்றன்றுள்ள அப்பம், விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
நீங்கள் மகிமையைக் கண்டால் மட்டும் போதாது, பிரதிபலித்தாலும் போதாது, நீங்கள் எப்பொழுதும் மகிமையின் அபிஷேகத்தால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எழும்பிப் பிரகாசித்து, இருளில் வாழும் ஜனங்களை தேவனிடத் திற்குக் கொண்டு வரவேண்டும். நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமா இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் எழும்பிப் பிரகாசிக்கும்போது நிச்சயமாகவே புறஜாதி மக்களும், ஜனங்களும் உங்களிடத்திற்கு வருவார்கள். கர்த்தர் வாக்குப்பண்ணி சோல்லுகிறார், “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்” (ஏசா. 60:3).
வெளிச்சத்தைத் தேடி ஈசல்கள் பறந்து வருவதைப் போல, நிச்சயமாகவே பிரச்சனை உள்ளவர்கள் ஜெபத்திற்காக உங்களைத் தேடி வருவார்கள். “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்” (ஏசா.60:2). நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உங்களுடைய நேரங்களையும், வரங்களையும்,கிருபைகளையும், தாலந்துகளையும் கர்த்தருடைய ஊழியத்திற்கு செலவழிப்பீர்களோ,அவ்வளவுக்கவ்வளவு தேவ மகிமை உங்களை நிரப்பிக் கொண்டே இருக்கும். இறைக்கிற கிணறு ஊறிக்கொண்டே இருக்கும் அல்லவா? மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது.
ஆகவே, கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசியுங்கள். உபவாசித்து, ஜெபித்து, எப்பொழுதும் தேவ ஆவியினாலும், மகிமையினாலும் நிரப்பப்படுங்கள். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் சேட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப் படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). கர்த்தர் உங்களை எழும்பிப் பிரகாசிக்கச் சேயும்போது, எப்பொழுதும் கர்த்தரை உயர்த்திக்கொண்டே இருங்கள். கனத்தையும், மகிமையையும் அவருக்குச் சேலுத்துங்கள். “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:30) என்று சொன்ன யோவான் ஸ்நானகனைப் போல, எப்பொழுதும் அவருடைய நாமத்தை உயர்த்துங்கள். அப்பொழுது மகிமையின்மேல் மகிமையடைவீர்கள்.
நாம் அணைந்து, குளிர்ந்து கிடக்கிற விளக்கைப் போல அல்ல. தண்டின் மேல் வைக்கப்பட்டு வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் விளக்காக காணப்படவேண்டும். ஒரு விளக்கு எரிய வேண்டுமென்றால், அதின் திரி எப்பொழுதும் எண்ணெக்குள் மூழ்கி இருக்க வேண்டுமல்லவா?பரிசுத்த ஆவியானவராகிய எண்ணெக்குள் நம்முடைய உள்ளத்தின் ஆழம் எப்பொழுதும் மூழ்கி இருக்கும்போது, அபிஷேகத்தை உறிஞ்சி மேலே எழும்பிப் பிரகாசிப்பீர்கள். எண்ணெ குறைந்துவிட்டாலோ, அல்லது நின்று விட்டாலோ, விளக்கு அணைந்து விடும். ஆகவே பரிசுத்த ஆவியானவருடைய நிறைவு எப்பொழுதும் நம்முடைய ஆவியில் இருக்கட்டும்
ஆமென் .. அல்லேலூயா !
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி - அன்றன்றுள்ள அப்பம், விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
No comments:
Post a Comment