Tuesday, 15 July 2014

கீழ்ப்படிந்தால் அற்புதம் நடக்கும்

“அவர் (இயேசு) உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள்.” யோவான் 2:5

இயேசு தம்முடைய சீஷர்களை தெரிந்தெடுத்து சிலநாட்களே ஆகியிருந்தன. இப்போது இவர்கள் எல்லாரும் கலிலேயாவில் உள்ள  கானா ஊரில் நடைபெறும் கலியாண விருந்துக்கு செல்கின்றனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அங்கிருக்கிறார். விருந்தில் திராட்ச ரசத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. தன் மகனிடம் சொன்னால் ஏதாவது செய்வார் என நினைத்து மரியாள் அவரிடம்: ‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது’ என்று சொல்கிறார். ஆனால் இயேசு, “ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை” என்று பதிலளிக்கிறார்.— யோவான் 1:35-51; 2:1-4,  ஒரு கருத்துக்கு அல்லது ஆலோசனைக்கு மறுப்பு தெரிவிக்க அந்த நாட்களில் பொதுவாக கேட்கப்பட்ட கேள்வியாகும்.  மரியாளுக்கு இயேசு, பிதாவின் சித்தத்தைச் செய்வதில்  காட்டிய உறுதியை வெளிப்படுத்தியது! நாமும் கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமையை முழுமையாய் செய்ய இயேசுவைப்போல உறுதி கொண்டிருப்போமாக. —பிரசங்கி 12:13

தன் மகன் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு, மரியாள் உடனடியாக விலகிச் சென்று,வேலைக்காரர்களிடம் “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள்.” என்றார். இயேசு, வேலைக்காரர்களை நோக்கி கற்சாடிகளில் தண்ணீர் நிரப்ப சொல்கிறார். பாலஸ்தீன நாட்டிலே தண்ணீர் குறைவான அளவே கிடைக்கும். அந்த தண்ணீரும் சற்று உவர்ப்பாகவே இருக்கும். ஆகவே இஸ்ரயேல் மக்கள் சாப்பிடும் பொழுதும், படிக்கை நாட்களிலும் தண்ணீருக்கு பதில் திராட்சை ரசம் அருந்துவர். இஸ்ரயேல் மக்கள் வீட்டிற்குள் வரும் பொழுது கால்களை கழுவி உள்ளே நுழையும் பழக்கம் கொண்டவர்கள். அந்த கல்யாண வீட்டில் கால்களை கழுவ வைக்கபட்டிருந்த தண்ணீரை எடுத்து திராட்சை ரசத்தை சேமிக்கும் கற்சாடிகளில் ஊற்றச் சொன்னார். வேலைக்காரர்கள் இயேசுவின் சொல்லுக்கு மறுப்பு பேசாமல் கீழ்ப்படிந்து கால்களைக் கழுவ வைத்திருந்த தண்ணீரை எடுத்து நிரப்பினார்கள். பின்னர் அவர்களை நோக்கி, அதை மொண்டு பந்தியில் இருப்பவர்களிடத்தில் கொடுக்க சொன்னார். தண்ணீரை நாம் தானே ஊற்றினோம். இந்த தண்ணீரை கொண்டுபொய் பந்தியில் திராட்சை ரசத்துக்காய் காத்திருப்பவர்களிடம் கொடுத்தால், அவர்கள் நம்மை என்ன செய்வார்கள் என்றெல்லாம் சிந்திக்காமல் இயேசுவின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து பந்திக்கு எடுத்து சென்றார்கள். அந்தத் தண்ணீர் மிகவும் சுவையான திராட்ச ரசமாக மாறுகிறது.

இயேசுவின் இந்த முதல் அற்புதம் நிறைவேற மரியாளுடைய கீழ்படிதலும், வேலைக்காரர்களின் கீழ்படிதலும் முக்கிய காரணமாக இருந்க்கின்றதை நம்மால் அறியமுடிகின்றது. அநேக நேரங்களில் நாம் கர்த்தருக்கு கீழ்படியாமல் சூழ்நிலைகளை பார்த்து விசுவாசத்தை இழப்பதாலேயே நமது வாழ்வில் இயேசுவால் அற்புதம் செய்ய முடிவதில்லை. அன்றைக்கு அந்த வேலைக்காரர்கள் இயேசுவின் வார்த்தைக்கு கீல்படியாது இருந்திருந்தால் அவ்வளவு பெரிய அற்ப்புதம் நடந்திருக்குமா? இதை வாசிக்கின்ற நீங்கள் சூழ்நிலைகளைப் பார்க்காமல்  இயேசுவுக்கு கீழ்ப்படிந்தால் உங்களுடைய வாழ்விலும் அற்புதங்கள் நடக்கும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக......!
ஆமென்..அல்லேலூயா...!

நன்றி -விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment